Friday 21 March 2014

சுரைக்காயில் இருக்கு சூப்பர் பலன்..! 


சுரைக்காயை பொடியாக நறுக்கி, உப்பு, சீரகம், மஞ்சள்தூள், ஒரு தக்காளி சேர்த்துவேக வைத்து, வெந்தப் பயத்தம் பருப்பு சேர்த்து கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம்.

சுரைக்காய் உடலுக்கு குளிர்ச்சியைத் தரக்கூடியது. உடல் சூட்டை குறைக்கும். மலச்சிக்கல், வயிற்று வலி, வயிற்று புண் சரியாகும்.

தாய் பால் சுரக்கும். மூல நோய் விலகும். ரத்தம் சுத்தமடைந்து சிறுநீர் எரிச்சல் நீங்கும்.

உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய்க்கு அருமருந்து. உடல் பருமனைக் குறைக்கும். அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் சுரைக்காய் சாறு அருந்தலாம்.


பசியை போக்கும் பயறு வகை..! 


எல்லோருக்குமே பயறு ஏற்றது என்றாலும், சர்க்கரை நோயாளிகளுக்குதான் அடிக்கடி அதிகப் பசி எடுக்கும். இதனால் திடீர் சர்க்கரை அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

பசியைப் போக்க, சர்க்கரை உயராமல் தடுக்க பயறு வகைகள்தான் பெஸ்ட்.
முளைகட்டிய பாசிப்பயறு (அ) கொண்டைக்கடலை இவற்றை ஊற வைத்து சுண்டலாக செய்து வைத்துக் கொள்ளலாம்.

அதீத பசியை குறைக்கும். வயிறும் நிரம்பும். சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைக்கும்.

0 comments:

Post a Comment

Blog Archive